டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உட்பட 14 பேருக்கு கேல் ரத்னா விருது குடியரசுத் தலைவரால் டெல்லியில் இன்று வழங்கப்பட்டது. நீரஜ் சோப்ரா(ஈட்டி எறிதல்), ரவிக்குமார்(மல்யுத்தம்), லவ்லினா(குத்துசண்டை), ஸ்ரீஜேஷ் (ஹாக்கி), அவனி(துப்பாக்கி சுடுதல்), சுமித்(தடகளம்), பிரமோத்(பாட்மிண்டன்), சுனில் சேத்ரி(கால்பந்து), பவனி(வாள் வீச்சு), ஷிகர் தவான்(கிரிக்கெட்) ஆகியோருக்கு கேல் ரத்னா விருது மற்றும் வீரர்களுக்கான அர்ஜுனா விருது, பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சாரியா விருது ஆகியவை குடியரசுத் தலைவர் வழங்கினார்.